மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

எல்லைப் பகுதியில் டிரோன்: ராணுவம் துப்பாக்கிச் சூடு

சந்தேகத்துக்குரிய டிரோன் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

News image
Updated On :12 பிப்ரவரி 2024, 5:29 am

DIN

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதியில் வானில் பறந்த பாகிஸ்தான் டிரோன் நோக்கி இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வானில் டிரோன் நடமாட்டத்தைக் கவனித்த ராணுவத்தினர், டிரோனை நோக்கி மூன்று முறை சுட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பிறகு டிரோன் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பியது. நர் மன்கோடெ பகுதியில் பறந்த டிரோனை கீழே கொண்டுவரும் நோக்கில் டிரோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த பகுதியில் ராணுவம் தேடுதலில் ஈடுபட்டு வருகிறது. டிரோன் மூலமாக வெடிபொருள்கள், போதை பொருள்கள் ஆகியவை சட்டதிற்கு புறம்பாக கடத்தப்படுவதைத் தடுக்க எல்லை பகுதியில் டிரோன் நடமாட்டம் தென்பட்டால் தகவல் அளிப்பதற்கு சன்மானம் ரூ.3 லட்சம் என ஜம்மு காஷ்மீர் காவலர்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.