வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்!

காட்டு யானை தாக்கி வயநாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்தது குறித்து கேரள முதல்வருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2024, 9:59 am

DIN

கேரள மாநிலம் வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

காட்டு யானை தாக்கி வயநாட்டைச் சேர்ந்தவர் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து கேரள முதல்வருக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், பையம்பள்ளியைச் சேர்ந்த அஜீஷ் என்பவர் யானை தாக்கி உயிரிழந்தார். யானை தாக்கி மற்றொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வனவிலங்குகளின் தாக்குதல்கள், குறிப்பாக யானைத் தாக்குதல்களால் வயநாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காடுகளை ஒட்டி வசிப்பவர்கள் எப்போதும் அச்சத்தில் வாழ்கின்றனர்.

நாங்கள் மீண்டும் மீண்டும் மனித-வனவிலங்கு மோதல் பிரச்னையை எழுப்பியுள்ளோம், மேலும் வயநாட்டில் இதுபோன்ற தாக்குதல்களைத் தணிக்க, குறிப்பாக விவசாயிகளைப் பாதுகாக்க உங்கள் தலையீட்டைக் கோருகிறோம். இந்த சிக்கலைச் சமாளிக்க ஒரு விரிவான செயல்திட்டம் இல்லாதது இன்னும் மோசமாகிவிட்டது. என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.