கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிப்.29ல் அசாம் செல்கிறார் ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிப்.29ல் பார்பெட்டா நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெறும் பேரணியில் உரையாற்றுகிறார்.

News image

ராஜ்நாத் சிங்

Updated On :13 பிப்ரவரி 2024, 6:24 am

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிப்ரவரி 29ல் அசாம் செல்கிறார், அங்கு பார்பெட்டா மக்களவைத் தொகுதியில் மாபெரும் பேரணியில் உரையாற்ற உள்ளதாக பாஜக நிர்வாகி தெரிவித்தார்.

அசாம் மாநில பாஜக கட்சியின் தலைவர் பாபேஷ் கலிதா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்த மாத இறுதியில் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் பார்பெட்டா தொகுதியில் பேரணியில் கலந்துகொள்கிறார். அவரை வரவேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் பார்பெட்டா நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு மெகா பேரணியில் உரையாற்றுகிறார். பார்பேட்டா மக்களவை தொகுதியில் கட்சி காரியகர்த்தாக்களின் சன்மிலன் பிப்ரவரி 29 அன்று நடைபெறும், அதே நாளில் மக்களவை பிரபந்தன் குழுக் கூட்டமும் நடைபெறும்.

பிரதமர் மோடியும் மீண்டும் மாநிலத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அவரது வருகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் வரும் நாள்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள் என்றும் மாநில பாஜக தலைவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.