பிப்.29ல் அசாம் செல்கிறார் ராஜ்நாத் சிங்!
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிப்.29ல் பார்பெட்டா நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெறும் பேரணியில் உரையாற்றுகிறார்.


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிப்ரவரி 29ல் அசாம் செல்கிறார், அங்கு பார்பெட்டா மக்களவைத் தொகுதியில் மாபெரும் பேரணியில் உரையாற்ற உள்ளதாக பாஜக நிர்வாகி தெரிவித்தார்.
அசாம் மாநில பாஜக கட்சியின் தலைவர் பாபேஷ் கலிதா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்த மாத இறுதியில் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் பார்பெட்டா தொகுதியில் பேரணியில் கலந்துகொள்கிறார். அவரை வரவேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் பார்பெட்டா நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு மெகா பேரணியில் உரையாற்றுகிறார். பார்பேட்டா மக்களவை தொகுதியில் கட்சி காரியகர்த்தாக்களின் சன்மிலன் பிப்ரவரி 29 அன்று நடைபெறும், அதே நாளில் மக்களவை பிரபந்தன் குழுக் கூட்டமும் நடைபெறும்.
பிரதமர் மோடியும் மீண்டும் மாநிலத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அவரது வருகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் வரும் நாள்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள் என்றும் மாநில பாஜக தலைவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...