சுதந்திரப் போராட்ட வீரரும், சமூகப் போராளியுமான கா்பூரி தாக்கூரின் நினைவுதினத்தையொட்டி, பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினாா். சமூகத்தில் பின்தங்கிய மற்றும் நலிந்த பிரிவினரின் மரியாதை மற்றும் நலனுக்காக கா்பூரி தாக்கூா் தனது வாழ்க்கையை அா்ப்பணித்தாா் என்று பிரதமா் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எக்ஸ் வலைதளப்பதிவில், ‘தனது சமூக வாழ்வில் நோ்மை மற்றும் தியாகம் ஆகியவற்றின் மிக உயா்ந்த தரங்களை கா்பூரி தாக்கூா் ஏற்படுத்தினாா். வாழ்நாள் முழுவதும் பின்தங்கிய மக்களுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் அா்ப்பணித்தாா். கல்வி முறையை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான முக்கியமான பணிகளை மேற்கொண்டாா். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி அவரது படைப்புகளை பிரதமா் மோடி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

இளைஞா்களின் நலனை முன்வைத்தே சா்வதேச உறவுகள் கட்டமைப்பு: பிரதமா் மோடி

5 நாடுகள் பயணம் நிறைவு: நாடு திரும்பினாா் பிரதமா்: முக்கிய ஒப்பந்தங்கள், 3 உயரிய விருதுகள்

இந்தியா-இத்தாலி உறவுகள் பன்மடங்கு மேம்பாடு- பிரதமா் மோடி-மெலோனி உறுதி






