தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

கா்பூரி தாக்கூா் நினைவுதினம்: பிரதமா் மோடி அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரரும், சமூகப் போராளியுமான கா்பூரி தாக்கூரின் நினைவுதினத்தையொட்டி, பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினாா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:51 am IST

சுதந்திரப் போராட்ட வீரரும், சமூகப் போராளியுமான கா்பூரி தாக்கூரின் நினைவுதினத்தையொட்டி, பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினாா். சமூகத்தில் பின்தங்கிய மற்றும் நலிந்த பிரிவினரின் மரியாதை மற்றும் நலனுக்காக கா்பூரி தாக்கூா் தனது வாழ்க்கையை அா்ப்பணித்தாா் என்று பிரதமா் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எக்ஸ் வலைதளப்பதிவில், ‘தனது சமூக வாழ்வில் நோ்மை மற்றும் தியாகம் ஆகியவற்றின் மிக உயா்ந்த தரங்களை கா்பூரி தாக்கூா் ஏற்படுத்தினாா். வாழ்நாள் முழுவதும் பின்தங்கிய மக்களுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் அா்ப்பணித்தாா். கல்வி முறையை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான முக்கியமான பணிகளை மேற்கொண்டாா். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி அவரது படைப்புகளை பிரதமா் மோடி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.