மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புவனேஸ்வரில் மே மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்கும் தடுப்பூசி உற்பத்தி ஆலை

உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பு: ஒடிசா தடுப்பூசி ஆலை மேயில் உற்பத்தி தொடக்கம்

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 4:10 pm

Vishwanathan

புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள சாபிஜென் பயோலாஜிக்ஸ் தடுப்பூசி ஆலை தனது வணிக உற்பத்தி இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

அந்தருவாவில் உள்ள பயோடெக் பூங்காவில் உள்ள ஆலை நாள் ஒன்றுக்கு சுமார் 2.4 கோடி டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் நிலையில், அதன் முழு திறனில் இயங்கும் போது இது நாட்டின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி ஆலையாக மாறும் என்று முதல்வர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆலையில் காலரா, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான 15க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1,500 கோடி முதலீட்டில் இந்த தடுப்பூசி ஆலையானது 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும், அவர்களில் பெரும்பாலோர் உள்ளூர் மக்களாக இருக்கக்கூடும் வேளையில் புவனேஸ்வரில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியானது உலகின் உள்ள பல பகுதிகளுக்கு வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.