மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வாராணசியில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

வாராணசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்.

News image
- -
Updated On :23 பிப்ரவரி 2024, 10:22 am

DIN

உத்தரப் பிரதேசம் வாராணசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தத் திட்டங்களில் பல சாலைகள், சமையல் எரிவாயு பாட்டில் ஆலை, பால் பதப்படுத்தும் அலகு, நெசவாளர்களுக்கான பட்டுத்துணி அச்சிடுவதற்கான பொது வசதி மையம் ஆகியவை அடங்கும்.

குரு ரவிதாஸின் சிலையைத் திறந்துவைத்த பிரதமர்

குரு ரவிதாஸின் சிலையைத் திறந்துவைத்த பிரதமர்

இதோடு, வாராணசியில் ஜவுளித் துறைக்காக தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழகத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் தேசிய முதியோர் மையத்தையும் மோடி அடிக்கல் நாட்டினார்.

குரு ரவிதாஸின் சிலையைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, அவரது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்றார். ரவிதாஸ் அருங்காட்சியகத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுடன் அவர் உரையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.