வாராணசியில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!
வாராணசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்.


உத்தரப் பிரதேசம் வாராணசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தத் திட்டங்களில் பல சாலைகள், சமையல் எரிவாயு பாட்டில் ஆலை, பால் பதப்படுத்தும் அலகு, நெசவாளர்களுக்கான பட்டுத்துணி அச்சிடுவதற்கான பொது வசதி மையம் ஆகியவை அடங்கும்.

குரு ரவிதாஸின் சிலையைத் திறந்துவைத்த பிரதமர்
இதோடு, வாராணசியில் ஜவுளித் துறைக்காக தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழகத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் தேசிய முதியோர் மையத்தையும் மோடி அடிக்கல் நாட்டினார்.
குரு ரவிதாஸின் சிலையைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, அவரது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்றார். ரவிதாஸ் அருங்காட்சியகத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுடன் அவர் உரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...