மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மேற்கு வங்கத்தில் பீரங்கி அழிப்பு ஏவுகணை பயிற்சி

மேற்கு வங்கத்தில் பீரங்கி அழிப்பு ஏவுகணை பயிற்சி

News image

மேற்கு வங்க மாநிலம் தீஸ்தாவில் உள்ள சோதனைக் களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பீரங்கியைத் தாக்கி அழிக்கும் பயிற்சி.

Updated On :29 பிப்ரவரி 2024, 7:52 pm

மேற்கு வங்கத்தின் தீஸ்தாவில் உள்ள சோதனைக் களத்தில் பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் (ஏடிஜிஎம்) பயிற்சியை ராணுவத்தின் கிழக்குக் கட்டுப்பாட்டு தலைமையகம் மேற்கொண்டதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. திரிசக்தி படைப் பிரிவின்கீழ் கடந்த மாதம் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சியில் ‘ஒரு பீரங்கிக்கு ஒரு ஏவுகணை’ இலக்காக 260-க்கும் அதிகமான ஏவுகணைகள் பயிற்சியின்போது சோதித்துப் பாா்க்கப்பட்டன. சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படும் விதமாக நிலத்திலிருந்தும் ராணுவ வாகனங்கள், ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றிலிருந்தும் ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. மூத்த ராணுவ அதிகாரிகள் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 1,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் பங்கேற்றனா்.