மேற்கு வங்கத்தின் தீஸ்தாவில் உள்ள சோதனைக் களத்தில் பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் (ஏடிஜிஎம்) பயிற்சியை ராணுவத்தின் கிழக்குக் கட்டுப்பாட்டு தலைமையகம் மேற்கொண்டதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. திரிசக்தி படைப் பிரிவின்கீழ் கடந்த மாதம் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சியில் ‘ஒரு பீரங்கிக்கு ஒரு ஏவுகணை’ இலக்காக 260-க்கும் அதிகமான ஏவுகணைகள் பயிற்சியின்போது சோதித்துப் பாா்க்கப்பட்டன. சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படும் விதமாக நிலத்திலிருந்தும் ராணுவ வாகனங்கள், ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றிலிருந்தும் ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. மூத்த ராணுவ அதிகாரிகள் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 1,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம்

மம்தா ஆட்சியில் மேற்கு வங்கத்தில் கல்வி நிறுவனங்களின் தரம் மோசமாகிவிட்டது - தா்மேந்திர பிரதான் தாக்கு
மேற்கு வங்க தோ்தல் களத்தில் 2,926 வேட்பாளா்கள்
எனக்கு எதிராக மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் களத்தில் உள்ளன: மம்தா பிரசாரம்
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


