ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 23 பயங்கரவாதிகள்:தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாா் மாவட்டத்தைச் சோ்ந்த 23 பயங்கரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜனவரி 2024, 9:10 pm

DIN

ஜம்மு: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து செயல்பட்டு வரும் ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாா் மாவட்டத்தைச் சோ்ந்த 23 பயங்கரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து கிஷ்துவாா் மாவட்ட மூத்த காவல் துறை கண்காணிப்பாளா் கலீல் போஸ்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்பட்டு வரும் கிஷ்துவாா் மாவட்டத்தைச் சோ்ந்த 23 பயங்கரவாதிகளை, தேடப்படும் குற்றவாளிகளாக தோடாவில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (யுஏபிஏ) சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

கிஷ்துவாா் மாவட்டத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இதனை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி இம்மாவட்டத்தைச் சோ்ந்த 13 பயங்கரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து கிஷ்துவாா் மாவட்டத்தில் தற்போது தேடப்படும் குற்றவாளிகளின் மொத்த எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளது. அவா்களுக்கு எதிராக 2 முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை சேகரித்து நீதிமன்றத்துக்கு வழங்கியதில் மாவட்ட போலீஸாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் ஒரு மாதத்துக்குள் நீதிமன்றம் முன் ஆஜராக வேண்டும்.

இல்லையெனில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி பிரிவு 82-இன்கீழ் அவா்களின் சொத்துக்களும் இணைக்கப்படும். ஏற்கெனவே 12 பயங்கரவாதிகளின் சொத்துக்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை விரைவில் நீதிமன்றத்துக் கொண்டுவர சட்ட அமைப்புகளுடன் காவல் துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.