தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பசுபதிநாத் கோயிலில் ஜெய்சங்கர் வழிபாடு!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். 

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:25 am

DIN

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். 

ஜெய்சங்கர் 2024ஆம் ஆண்டு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வியாழக்கிழமை நேபாளம் வந்தடைந்தார். இன்று அதிகாலை பசுபதிநாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். 

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 

இரு நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், இந்தியா-நேபாளம் சுமுக உறவுக்காகவும் பிரார்த்தனை செய்ததேன். 

காத்மாண்டுவின் கிழக்குப் புறநகரில் புனித நதியான பாகமதியின் கரையில் அமைந்துள்ள பசுபதிநாத் கோயில் நேபாளத்தில் மிகவும் புகழ்பெற்ற இந்துக் கோயிலாகும். 

முக்கிய சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பசுபதிநாத்தை தரிசனம் செய்கின்றனர். 
இத்தலத்தில் சிவபெருமான் அவரது அவதாரத்தில் விலங்குகளின் பாதுகாவலரான பசுபதியாகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.