ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

5 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டவர்.. தில்லியில் உயிருடன் அதுவும்..

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது நபர் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், தில்லியில் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜனவரி 2024, 9:32 am

DIN


மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம் பக்பட் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நிலையில், கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், தில்லியில் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், தில்லியில் கார் ஓட்டுநராக வேலை செய்யும் யோகேந்திர குமாருக்கு அங்கு மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் இருப்பது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், பக்பத் பகுதியைச் சேர்ந்த யோகேந்திர குமார் மீது 2018ஆம் ஆண்டு குற்றவியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் காணாமல் போனார். அவரை அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷ் கொலை செய்திருக்கலாம்என்று அவரது சகோதரர்கள் குற்றம்சாட்டி, கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து தேடுதல் பணி நடந்தும், அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், யோகேந்திர குமார் தில்லியில் கார் ஓட்டுநராக பணியாற்றுவதும், அவர் வேறோரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

விசாரணையில், தனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி தில்லி வந்து அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததும், ஊரில் தான் கடத்திக் கொலை செய்யப்பட்டுவிட்டதாக குடும்பத்தார் கருதியதை தனக்கு சாதகமாக நினைத்து விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பக்பத் பகுதியில் வசித்து வரும் யோகேந்திர குமாரின் முதல் மனைவி ரீடா, இதுவரை அவர் எங்களை வந்து சந்திக்கவோ, பேசவோ இல்லை. உண்மை என்னவென்பதை காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.