27வது தேசிய இளைஞர் தின விழாவினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக்கில் நடைபெற உள்ள 27வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார்.
தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு நாட்டின் 763 மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள 'எனது பாரதம்' தன்னார்வலர்கள், நேரு யுவகேந்திரா சங்கதன் மற்றும் பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள்.
மேலும் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் சாலைப் பாதுகாப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள்.
பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் முக்கியமான போக்குவரத்து இடங்களில் போக்குவரத்தை கையாள்வதில் உதவுவதோடு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.
இதையும் படிக்க | போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
தன்னார்வலர்கள் அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று குழந்தைகளுடன் கதை சொல்லும் அமர்வுகள் மற்றும் பல்வேறு அரசாங்க திட்டங்களைப் பற்றிய தகவல்களை எடுத்துரைப்பார்கள்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



