‘ஜன. 31 முதல் பிப்.9 வரை பட்ஜெட் கூட்டத்தொடா்’

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரையில் நடைபெறும்
‘ஜன. 31 முதல் பிப்.9 வரை பட்ஜெட் கூட்டத்தொடா்’

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் பக்கத்தில், ‘17-ஆவது நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் குடியரசுத் தலைவரின் உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ஆம் தேதி வரையில் நடைபெறும். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

நிகழாண்டு மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். 17-ஆவது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16-ஆம் தேதி முடிவடைவதால், நடப்பு மக்களவையின் கடைசி கூட்டத்தொடராக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடா் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com