பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘ஜன. 31 முதல் பிப்.9 வரை பட்ஜெட் கூட்டத்தொடா்’

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரையில் நடைபெறும்

News image
Updated On :12 ஜனவரி 2024, 6:30 pm

DIN

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் பக்கத்தில், ‘17-ஆவது நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் குடியரசுத் தலைவரின் உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ஆம் தேதி வரையில் நடைபெறும். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

நிகழாண்டு மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். 17-ஆவது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16-ஆம் தேதி முடிவடைவதால், நடப்பு மக்களவையின் கடைசி கூட்டத்தொடராக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடா் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.