நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மகாராஷ்டிரம்: அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு நிலவியது. 

News image
கோப்புப் படம்.
Updated On :13 ஜனவரி 2024, 11:20 am

DIN

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு நிலவியது. 

மகாராஷ்டிர மாநிலம், டோம்பிவ்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை 11:00 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஏழாவது தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென 18 வது மாடி வரை பரவியது.

கட்டடத்தில் வசித்து வந்த அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீவிபத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

மின்கசிவு காரணமாக அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.