மூத்த குடிமகனிடம் ரூ.31 லட்சம் மோசடி: 6 பேர் மீது வழக்கு
தானே: முதலீட்டுத் திட்டங்கள் தருவதாகக் கூறி மூத்த குடிமகனிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்ததாக 6 பேர் மீது நவிமும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோபர்கைரானேவில் வசிக்கும் 66 வயதான புகார்தாரர், குற்றம் சாட்டப்பட்ட மோசடியாளர்கள் முதன் முதலில் 2023 நவம்பரில் தன்னை தொடர்பு கொண்டதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, அவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, பல்வேறு திட்டங்களில் ரூ.31.1 லட்சம் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தி உள்ளனர்.
தொடர்ந்து, பணம் கிடைக்காததால் ஓய்வு பெற்ற நபர் சைபர் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். இது குறித்து 6 பேர் மீது காவல் துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

