புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மூத்த குடிமகனிடம் ரூ.31 லட்சம் மோசடி: 6 பேர் மீது வழக்கு

முதலீட்டுத் திட்டங்கள் தருவதாகக் கூறி மூத்த குடிமகனிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்ததாக 6 பேர் மீது நவிமும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

News image
Updated On :14 ஜனவரி 2024, 3:05 pm

DIN

தானே: முதலீட்டுத் திட்டங்கள் தருவதாகக் கூறி மூத்த குடிமகனிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்ததாக 6 பேர் மீது நவிமும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

கோபர்கைரானேவில் வசிக்கும் 66 வயதான புகார்தாரர், குற்றம் சாட்டப்பட்ட மோசடியாளர்கள் முதன் முதலில் 2023 நவம்பரில் தன்னை தொடர்பு கொண்டதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, அவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, பல்வேறு திட்டங்களில் ரூ.31.1 லட்சம் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தி உள்ளனர். 

தொடர்ந்து, பணம் கிடைக்காததால் ஓய்வு பெற்ற நபர் சைபர் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். இது குறித்து 6 பேர் மீது காவல் துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.