நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லியில் தரையிறங்காத 8 விமானங்கள்!

தில்லியில் நிலவிவரும் மோசமான வானிலையால் 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வழி மாற்றப்பட்டன. 

News image

கோப்புப்படம்.

Updated On :14 ஜனவரி 2024, 9:10 am

DIN

தில்லியில் நிலவிவருக் மோசமான வானிலையால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனியால் பார்க்கும் திறன் குறைவாகியிருப்பதால் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

தில்லியின் மோசமான வானிலையால் விமானங்கள் தரையிறக்கப்பட முடியாமல், வேறு இடங்களுக்கு வழி மாற்றப்படுகின்றன. 7 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு விமானம் மும்பைக்கும் வழி மாற்றியனுப்பப்பட்டு அங்கு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளன. 

ஆர்.கே. புரம் பகுதியில் அதிகாலை நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 7 டிகிரி செல்சியல் பதிவாகியுள்ளது.  இந்நிலையில் வீடில்லாமல் தெருக்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு இரவு தங்குவதற்கான இடங்களை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அந்த தங்குமிடங்களில் கம்பளிகள், சுடுதண்ணீர் மற்றும் உணவு போன்றவை வழங்கப்பட்டுவருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.