கர்நாடகத்தில் காணாமல் போன தனியார் பள்ளி ஆசிரியையின் உடல் கோயிலுக்கு அருகே புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மக்னிக்யாஹல்லி கிராமத்தில் 28 வயதான தனியார் பள்ளி ஆசிரியை தீபிகா வி கோவ்டா, தனது கணவர் மற்றும் 7 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவர் மாலை வீடுதிரும்பவில்லை.
இதையடுத்து சனிக்கிழமை கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திங்கள் கிழமை குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிய விசாரித்தபோது, ஒரு இடத்தில் துர்நாற்றமடிப்பதை கவனித்தனர்.
இதையும் படிக்க: மியான்மர் ராணுவ விமானம் மிசோரம் அருகே விபத்து
நாற்றமடிக்கும் இடத்திற்கு சென்று தரையை லேசாக தோண்டியபோது காணாமல் போன ஆசிரியையின் துணி கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், ஆசிரியையின் உடலை காவல்துறையினர் தோண்டி எடுத்தனர்.
சட்டப்பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெரிந்தவர்கள்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் எனக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள்!

முதல் அரையிறுதி: மார்கோ யான்சென் அதிரடி; நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு!

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?

பெட்ரோநெட் எல்என்ஜி பங்குகள் 9% சரிவு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

