தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிப்பு!

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :24 ஜனவரி 2024, 10:20 am

DIN

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சில நீண்ட வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள் தொடர்பாக பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான டிஜிசிஏ.

இதையும் படிக்க | 

புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஏர் இந்தியா நிறுவனத்தினால் இயக்கப்படும் விமானங்களின் பாதுகாப்பு மீறல்கள் குறித்து விமான ஊழியர் ஒருவர் கூறிய புகாரைத் தொடர்ந்து விரிவான ஒழுங்குமுறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட விசாரணைக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என்பதால் அந்நிறுவனத்திற்கு டிஜிசிஏ அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த பாதுகாப்பு அறிக்கையானது ஏர் இந்தியா நிறுவனத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்களின் பாதுகாப்புடனும் தொடர்புடையதாகும். 

இதையும் படிக்க | 

"குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தின் செயல்பாடுகள் ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு  ஏற்றதாக இல்லை என்பதால், டிஜிசிஏ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது ஏர் இந்தியா மீது ரூ. 1.10 கோடி அபராதம் விதித்துள்ளது" என்று டிஜிசிஏ அமைப்பு கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.