தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஜெய்ப்பூர் டீக்கடையை புகழ்ந்த பிரான்ஸ் அதிபர்!

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடையை பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மாக்ரோன் பாராட்டியுள்ளார். 

News image
பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் | PTI
Updated On :26 ஜனவரி 2024, 10:29 am

DIN

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் தேநீர் குடித்து, அதைப் பாராட்டியதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார். 

ஜெய்ப்பூரில் உள்ள சுற்றுலாத்தளங்களை பிரதமர் மோடியுடன் கண்டுகளித்த பிரான்ஸ் பிரதமர், ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் தேநீர் அருந்தினார். பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனுக்கும் பாரம்பரியமான சாஹு தேநீர் செய்துகொடுத்ததாக கடை உரிமையாளர் ராஜ் குமார் சாஹு தெரிவித்தார். 

தேநீர் அருந்தும்போது இந்தியாவின் இணையவழி பரிவர்த்தனைகள் குறித்து பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபருக்கு விளக்கியதாக அவர் கூறினார். தேநீருக்கு இம்மானுவேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், தேநீரை பிரான்ஸ் அதிபர் புகழ்ந்ததாகவும் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.