பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கெதிரான மனநிலையில் உள்ளார் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கடந்த டிசம்பர் மாதம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்தது.
இதையும் படிக்க | பெங்களூருவில் பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
இதனையடுத்து பாஜக தலைமையிலான மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட குடியரசு தினத்திற்கான பஞ்சாப் மாநிலத்தின் அணிவகுப்பானது பஞ்சாப் மாநிலம் முழுவதும் வலம் வரும் என்று பகவந்த் மான் ஜன.9ஆம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் குடியரசு தினமான இன்று (ஜன.26) மீண்டும் இதனைக் குறிப்பிட்டுப் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்பில் பஞ்சாப் இடம்பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
பஞ்சாபின் சார்பில் அனுப்பப்பட்ட அணிவகுப்பை சற்றுமுன்பு நீங்கள் பார்த்தீர்கள். இதில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களும், நமது வரலாற்றைச் எடுத்துக்கூறும் வகையிலான படங்களும் இடம் பெற்றிருந்தன. இவை இல்லாமல் நமது குடியரசு தினத்தைக் கொண்டாட முடியாது.
இருப்பினும் இந்தப் பரிந்துரை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பஞ்சாப் மாநிலத்திற்கெதிரான மனநிலையைக் கொண்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | பாஜக கூட்டணிக்கு மாறுகிறாரா நிதீஷ் குமார்? காட்சியும் மாறுமே?
முன்னதாக, குடியரசு தின அணிவகுப்பில் பஞ்சாப், தில்லி மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்தது. இந்த மூன்றுமே எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கக்கூடிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில் ஊடகர் கைது: காவல் துறை விளக்கம்!
விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்! இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட்!

அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! சௌதி அரேபியா கண்டனம்!

அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



