நாகாலாந்து நிலக்கரி சுரங்க விபத்தில் 6 பேர் பலி!

நாகாலாந்தில் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெற்ற நிலக்கரி சுரங்கப் பணியின்போது ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் பலியாகினர். 
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read


நாகாலாந்தில் உள்ள ஓக்கா மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற நிலக்கரிச் சுரங்கப்பணியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் கவலைக்கிடமான நிலையில் காயப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுரங்கத்தொழிலில் ஈடுபட்டிருந்த அனைத்து தொழிலாளர்களும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள் என அந்தப் பகுதி எம்எல்ஏ அச்சும்பேமோ கிக்கோன் தெரிவித்துள்ளார். காயப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக திமாப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

மீட்புப் பணிகளில் மேற்பார்வையில் ஈடுபட்டுள்ள கிக்கோன் இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான சுரங்கப்பணிகளைத் தடுக்க மாநிலத் துறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com