நாகாலாந்தில் உள்ள ஓக்கா மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற நிலக்கரிச் சுரங்கப்பணியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் கவலைக்கிடமான நிலையில் காயப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தொழிலில் ஈடுபட்டிருந்த அனைத்து தொழிலாளர்களும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள் என அந்தப் பகுதி எம்எல்ஏ அச்சும்பேமோ கிக்கோன் தெரிவித்துள்ளார். காயப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக திமாப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிக்க: பிகாரில் அரசியல் மாற்றம்: பாஜக எம்எல்ஏ வெளியிட்ட முக்கிய தகவல்
மீட்புப் பணிகளில் மேற்பார்வையில் ஈடுபட்டுள்ள கிக்கோன் இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான சுரங்கப்பணிகளைத் தடுக்க மாநிலத் துறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.