சண்டீகர் மேயர் தேர்தல்: வெற்றி பெற்றது யார்?

சண்டீகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இணைந்து பாஜகவை எதிர்கொண்டன.
மனோஜ் சோங்கர் மற்றும் பாஜகவினர் | ANI
மனோஜ் சோங்கர் மற்றும் பாஜகவினர் | ANI
Published on
Updated on
1 min read

சண்டீகர் மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜக கட்சியைச் சேர்ந்த மனோஜ் சோங்கர், ஆம் ஆத்மி குல்தீப் குமாரைத் தோற்கடித்து மேயர் பதவியை வென்றுள்ளார்.

மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 30 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலில்படி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.

கூட்டணி அடிப்படையில் ஆம் ஆத்மி மேயர் பொறுப்புக்கும் காங்கிரஸ் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன.

பாஜக 16 வாக்குகளையும் இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. 

பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com