இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம் தற்போது பிகாரை அடைந்துள்ளது. அங்கு அராரியா பகுதியிலுள்ள முகாமில் மகாத்மா காந்திக்கு அவரது நினைவு நாளில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, 'இந்த நாளில்தான், வன்முறை மற்றும் வெறுப்பின் சித்தாந்தம் மகாத்மா காந்தியை இந்த நாட்டிடமிருந்து பறித்தது. இப்போது அதே சித்தாந்தம், அவரது கொள்கைகளையும், லட்சியங்களையும் இந்த நாட்டிடமிருந்து பறிக்க நினைக்கிறது' எனக் கூறினார்.
மேலும், 'ஆனால் இந்த வெறுப்பெனும் புயலால் நமது உண்மை மற்றும் நல்லிணக்கம் எனும் நெருப்பு அணைந்திடக்கூடாது. அதுவே நாம் மகாத்மாவிற்கு செய்யும் உண்மையான அஞ்சலி' எனப் பதிவிட்டுள்ளார்.
'மகாத்மா காந்தியின் கொள்கைகளையும் லட்சியங்களையும் அழிக்க முயற்சிப்பவர்களை எதிர்ப்போம் என இந்த நாளில் உறுதியேற்க வேண்டும்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
1948ல் மகாத்மா காந்தி கோட்சே எனும் இந்து தேசியவாதியால் கொலை செய்யப்பட்டார். 1949ல் கோட்சேக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காக்களூா் ஏரியில் ரூ. 3.52 கோடியில் சீரமைக்கப்பட்ட பணிகள் மற்றும் நடைபாதை தளம்

தடைகள் தகரும் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!

தேசியப் பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து: சோனம் வாங்சுக் சிறையில் இருந்து விடுதலை

பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 2.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

