மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

போதை பொருள் பரிமாற்றம்: நைஜீரிய நாட்டவர் கைது

போதை பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டபோது அவரிடம் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் இருந்தன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:44 am

DIN

தானே: நவி மும்பை காவலர்கள், நைஜீரியாவைச் சேர்ந்த போதை பொருள் முகவரை கார்கர் பகுதியில் கைது செய்துள்ளனர்.

அவரிடம் ரூ.5.20 லட்சம் மதிப்புள்ள எம்டி எனச் சொல்லப்படுகிற போதை மாத்திரைகள் இருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு அந்தப் பகுதிக்கு சென்றது. தடை செய்யப்பட்ட பொருளை அங்கு கை மாற்றுவதற்காக மேற்குறிப்பிட்ட நைஜீரிய நபர் செவ்வாய்கிழமை இரவு வந்தபோது காவல்துறை கைது செய்துள்ளது.

போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.