தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக ஐபிஎஸ் அதிகாரி ரவிசந்திரன் நியமனம்
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக டி.வி.ரவிசந்திரன் நியமனம்

Updated On :2 ஜூலை 2024, 11:14 pm

புது தில்லி: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநரும், 1990- தமிழகப் பிரிவைச் சோ்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான டி.வி.ரவிசந்திரனை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது.
இதுதொடா்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி டி.வி.ரவிசந்திரனை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்த ராஜீந்தா் கன்னா தேசிய பாதுகாப்பு கூடுதல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...