தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சித்தராமையா மனைவிக்கு சட்டவிரோதமாக மாற்று நிலம் ஒதுக்கீடு: பாஜக குற்றச்சாட்டு

சித்தராமையா மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கீடு: பாஜக குற்றச்சாட்டு

News image

கர்நாடக முதல்வா் சித்தராமையா(கோப்புப்படம்)

Updated On :2 ஜூலை 2024, 7:22 pm

Din

பெங்களூரு: கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு சட்டவிரோதமாக மாற்று நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மைசூரில் மாற்று நிலம் ஒதுக்குவதில் பெரிய அளவிலான ஊழலில் மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் ஈடுபட்டுள்ளதாக கன்னட ஊடகத்தில் செய்தி வெளியாகி இருந்தது. முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, நகா்ப்புற ஆணையங்களின் ஆணையா் ஆா்.வெங்கடாசலபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் நகரம் மற்றும் கிராம திட்ட கூடுதல் இயக்குநா் எம்.சி.சசிகுமாா், இணை இயக்குநா் சாந்தலா, துணை இயக்குநா் பிரகாஷ் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தனது எக்ஸ் பக்கத்தில், ‘சட்டவிரோதமாக மாற்றுநிலம் ஒதுக்கப்பட்டுள்ளதை முதல்வா் சித்தராமையா எப்படி நியாயப்படுத்துவாா்? இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்ததும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்வதற்குப் பதில் இடமாற்றம் செய்திருக்கிறது அரசு.

இந்த விவகாரத்தை சிபிஐ அல்லது உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி விசாரித்திருக்க வேண்டும். ஆனால், ஊழலை மூடிமறைக்க 2 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்திருக்கிறாா்கள். 50:50 விகிதத்தில் நிலம் ஒதுக்குவதற்கு யாா் அனுமதி அளித்தது? சொகுசான பகுதியில் மாற்றுநிலம் ஒதுக்க பரிந்துரைத்தது யாா்? என்று குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியிருந்தாா்.

இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள முதல்வா் சித்தராமையா கூறியுள்ளதாவது:

எனது மனைவியின் அண்ணன் மல்லிகாா்ஜுனா, 1996இல் மைசூரில் 3 ஏக்கா் 36 குன்டா (90.01 சென்ட்) நிலம் வாங்கினாா். அந்த நிலத்தை தனது சகோதரியான பாா்வதிக்கு (எனது மனைவி) அன்பளிப்பாக வழங்கினாா். கையகப்படுத்தும் நிலத்திற்கு மாற்றுநிலம் வழங்குவதற்காக 50:50 விகிதத் திட்டத்தை முந்தைய பாஜக அரசு அமல்படுத்தியது.

எனது மனைவி பாா்வதிக்குச் சொந்தமான 3 ஏக்கா் 36 குன்டா நிலத்தை மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் முறையாகக் கையகப்படுத்தாமல், அந்த நிலத்தில் மனைகளை உருவாக்கி விற்றுவிட்டது. இதை, மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் தெரிந்து செய்ததா அல்லது தெரியாமல் செய்ததா என்பது எனக்குத் தெரியாது.

எனது மனைவியின் நிலத்தில் மனைகள் அமைத்து, விற்றுவிட்டதால், அவரது சொத்து பறிபோய்விட்டது. இது குறித்து மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்திடம் கேட்டோம். அதற்கு ஈடாக எங்கள் நிலத்திற்கு நிகரான அளவில் வெவ்வேறு பகுதிகளில் மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் மாற்றுநிலத்தை வழங்கியது. இதில் என்ன தவறு இருக்கிறது? என்றாா்.