தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஹாத்ரஸில் உயிரிழந்தோருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: உ.பி. முதல்வர்

ஹாத்ரஸில் ஆன்மிகச் சொற்பொழிவில் பாதிப்படைந்தோருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணத் தொகை அறிவிப்பு

News image

-

Updated On :2 ஜூலை 2024, 7:01 pm IST

ஹாத்ரஸில் ஆன்மிகச் சொற்பொழிவில் பாதிப்படைந்தோருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில், போலே பாபா தலைமையிலான ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த சொற்பொழிவில் பங்கேற்ற மக்கள், திரும்பி வெளியே செல்ல முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதனால், கூட்டத்தில் சென்ற சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்தும் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் கிடைத்த தகவல்களின்படி, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணத்தொகையாக அறிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் காவல்துறை குழுவையும் நியமித்துள்ளார்.

இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.