மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் குறித்து பொய்களைப் பரப்பும் "இந்தியா' கூட்டணி: மத்திய கல்வி அமைச்சர்

நீட் விவகாரம் குறித்து தவறான கருத்துகளை பரப்பும் எதிர்க்கட்சிகள்

News image
Updated On :3 ஜூலை 2024, 9:20 pm

Din

"இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) குறித்து பொய்களை "இந்தியா' கூட்டணி பரப்பி வருகிறது. ஏமாற்றும் அரசியலை அவர்கள் நிறுத்தவேண்டும்' என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

"மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை பொறுத்துக்கொள்ள முடியாது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது. எனவே, நீட் விவகாரம் குறித்து தவறான கருத்துகளை பரப்பும் ஏமாற்று அரசியலை காங்கிரஸýம் "இந்தியா' கூட்டணியும் நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி புதன்கிழமை குறிப்பிட்ட நிலையில், இந்தக் கருத்தை தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பழைய மற்றும் தற்போதைய விவகாரங்களில் நாட்டை ஏமாற்றும் வரலாற்றை காங்கிரஸ் கொண்டிருக்கிறது. நீட் விவகாரத்திலும் அதன் உள்நோக்கம் தற்போது வெளிப்பட்டுள்ளது. தேசத்துக்கு எதிரான மற்றும் மாணவர்களுக்கு எதிரான புரளிகள் மற்றும் பொய்களைப் பரப்புவதன் மூலம் முக்கியப் பிரச்னையிலிருந்து கவனத்தை திசைதிருப்பி, நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதே "இந்தியா' கூட்டணியின் உள்நோக்கம்.

நீட் விவகாரம் தொடர்பாக பொய்களைப் பரப்பி மாணவர்களைத் தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. ஏமாற்றும் அரசியலை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.