டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 1 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி ரூ.21 கோடி பரிசுத் தொகை வழங்கிய நிலையில், பிசிசிஐ ரூ.125 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிசிசிஐயைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் அறிவித்துள்ளார்.
முன்னதாக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நான்கு மும்பை வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அப்போது உலகக் கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதற்கு முதல்வர் ஷிண்டே மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவின் சிறப்பான கேட்ச்சை அவர் குறிப்பாக பாராட்டினார். அத்துடன் வியாழன் அன்று தெற்கு மும்பையில் நடந்த இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு கூட்டத்தை திறம்பட நிர்வகித்த மும்பை காவல்துறையினரையும் முதல்வர் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்! 7-வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது!

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி?

நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வான உலகக் கோப்பையை நடத்தும் 3 நாடுகள்!

விம்பிள்டன் வெற்றியாளருக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



