பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆம் ஆத்மியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சஞ்சய் சிங் நியமனம்

சஞ்சய் சிங்கிற்கு புதிய பொறுப்பு: ஆம் ஆத்மி நாடாளுமன்றக் குழு தலைவர்

News image
சஞ்சய் சிங்(கோப்புப் படம்)
Updated On :5 ஜூலை 2024, 11:45 am

DIN

ஆம் ஆத்மியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சஞ்சய் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பொறுப்பை நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன்.

அரவிந்த் கேஜரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த மார்ச் மாதம் பதவியேற்ற சஞ்சய் சிங்கிற்கு தற்போது கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி, 10 எம்.பி.க்களுடன் மாநிலங்களவையில் நான்காவது பெரிய கட்சியாக உள்ளது. மேலும் மக்களவையில் அக்கட்சிக்கு மூன்று எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.