ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்று ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பின், தெலங்கானா முதல்வருடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இரு மாநில முதல்வர்களும் இன்று(ஜூலை 6) சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆந்திர பிரதேச மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்(2014) கீழ், இரு மாநிலங்களிடையே நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியுடன், அம்மாநில துணை முதல்வர் மல்லு பாட்டி விக்கிரமார்கா உள்பட இருமாநில அமைச்சர்களும் உடனிருந்தனர். தெலங்கானா தலைமைச் செயலர் சாந்தி குமாரி, ஆந்திர தலைமைச் செயலர் நீரப் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முக்கியமாக, இந்த ஆலோசனைக் கூட்டம் மூலம், ஒன்றுபட்ட ஆந்திர பிரதேச மாநிலமாக இருந்தபோது ஒரே மாநில அரசின்கீழ் செயல்பாட்டில் இருந்த அரசு நிறுவனங்களை இருமாநிலங்களுக்கும் பிரிப்பது, கோதாவரி, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணப்படுமென தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்கள்: தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைப்பு

பிரதமர் மோடியை மாரீசனுடன் ஒப்பிடுவதா?: தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்!

தமிழகத்தில் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்: தெலங்கானா அமைச்சா் பேச்சு
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


