டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஆந்திர, தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு!

தெலங்கானா முதல்வருடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

News image

படம் | ஏஎன்ஐ

Updated On :6 ஜூலை 2024, 8:50 pm IST

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்று ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பின், தெலங்கானா முதல்வருடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இரு மாநில முதல்வர்களும் இன்று(ஜூலை 6) சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆந்திர பிரதேச மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்(2014) கீழ், இரு மாநிலங்களிடையே நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியுடன், அம்மாநில துணை முதல்வர் மல்லு பாட்டி விக்கிரமார்கா உள்பட இருமாநில அமைச்சர்களும் உடனிருந்தனர். தெலங்கானா தலைமைச் செயலர் சாந்தி குமாரி, ஆந்திர தலைமைச் செயலர் நீரப் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முக்கியமாக, இந்த ஆலோசனைக் கூட்டம் மூலம், ஒன்றுபட்ட ஆந்திர பிரதேச மாநிலமாக இருந்தபோது ஒரே மாநில அரசின்கீழ் செயல்பாட்டில் இருந்த அரசு நிறுவனங்களை இருமாநிலங்களுக்கும் பிரிப்பது, கோதாவரி, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணப்படுமென தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.