தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

30 பேருடன் சென்ற மாநகரப் பேருந்து தீப்பிடித்தது! உயிர்ச்சேதம் தவிர்ப்பு

பெங்களூரில் 30 பேருடன் சென்ற அரசுப் பேருந்து தீப்பிடித்தது..

News image

படம் | எக்ஸ் தளம்

Updated On :9 ஜூலை 2024, 5:51 am

DIN

பெங்களூரு மாநகரில் அரசுப்பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு மெட்ரோ போக்குவரத்துக் கழகத்தால் 144ஈ வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து இன்று(ஜூலை 9) காலை 9 மணியளவில் மாநகரின் எம்.ஜி. சாலையில் அனில் கும்ப்ளே வளைவுப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்தின் இன்ஜினில் இருந்து பற்றத் தொடங்கிய தீ, வேகமாக வாகனம் முழுவதும் பரவியது. பேருந்தின் முன்பக்கத்திலிருந்து புகை வருவதைக் கண்ட பயணிகள் உடனடியாக வாகனத்தை விட்டுக் கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணித்த நிலையில் அவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.