பிஎம்டபிள்யூ கார் விபத்து: சிவசேனை தலைவரின் மகன் கைது!

பிஎம்டபிள்யூ விபத்து: சிவசேனை தலைவரின் மகன் மிஹிர் ஷா கைது
பிஎம்டபிள்யூ கார் விபத்து
பிஎம்டபிள்யூ கார் விபத்து
Published on
Updated on
1 min read

மும்பை வோர்லி பகுதியில் தம்பதி மீது பிஎம்டபிள்யூ காரை ஏற்றிய விபத்தில் தலைமறைவாகவிருந்த காரை ஓட்டிவந்ததாகச் சந்தேகிக்கப்படும் மிஹிர் ஷாவை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியின் முக்கிய தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா காரை ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது.

விபத்து நடப்பதற்கு முன்னர் மிஹிர் ஷா மதுபான கடையில் இருந்ததும் அங்கு அவர் பணம் செலுத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மது அருந்தி வாகனம் ஓட்டியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

பிஎம்டபிள்யூ கார் விபத்து
பிஎம்டபிள்யூ கார் விபத்து மதுவினால் ஏற்பட்டதாக சந்தேகம்!

மிஹிர் ஷா தந்தை ராஜேஷ் ஷா, உடன் பயணித்த கார் ஓட்டுநர் ராஜ்ரிதி பிடாவத் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் விபத்து நடந்த மூன்று நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மிஹிர் ஷா கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விபரங்கள் இன்னும் பெறப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com