
7 மாநிலங்களிலுள்ள 13 தொகுதிகளுக்கு இன்று (ஜூலை 10) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டிலுள்ள விக்கிரவாண்டியில் அதிக வாக்குகள் பதிவாகின.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், பிகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் 77.73% வாக்குகள் பதிவாகின. (5 மணி நிலவரப்படி)
அதற்கு அடுத்தபடியாக ஹிமாசலப் பிரதேச மாநிலம் நலகர் தொகுதியில், 75.22% வாக்குகள் பதிவாகின.
ஹிமாசலப் பிரதேசம்
டேஹ்ரா - 46.47%
ஹமீர்பூர் - 65.78%
நலகர் - 75.22%
பிகார்
ரூபாலி - 51.14%
மத்தியப் பிரதேசம்
அமர்வாரா - 72.89%
பஞ்சாப்
மேற்கு ஜலந்தர் - 51.30%
உத்தரகண்ட்
பத்ரிநாத் - 47.68%
மங்களூர் - 67.28%
மேற்கு வங்கம்
பாக்தா - 65.15%
ராய்கஞ்ச் - 67.12%
மணிக்தலா - 51.39%
ரனாகாட் தக்ஷின் - 65.37%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.