புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ம.பி.யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

சாட்னா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

ம.பி.யில் அதிர்ச்சி

Updated On :10 ஜூலை 2024, 11:15 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் சாட்னா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாட்னா நகரில் தம்பதியர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவரது வீட்டில் தாய் மற்றும் இரண்டு மகன்கள் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் கணவர் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நசிராபாத் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்டார். வாடகை வீட்டில் மனைவி மற்றும் அவரது மகன்கள் இருவரின் உடல்கள் சடலமாக மீட்டனர்.

இறந்தவர்கள் ராகேஷ் சௌத்ரி (35), அவரது மனைவி சங்கீதா (32) மற்றும் அவர்களது 6 மற்றும் 8 வயதுடைய இரு மகன்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, மேலும் காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.