மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் கோரலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது

News image
உச்சநீதிமன்றம்.
Updated On :10 ஜூலை 2024, 11:51 pm

DIN

குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆர்பிசி) பிரிவு 125-இன் கீழ், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் ஜீவனாம்ச தொகை கோரலாம் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

தெலங்கானாவில் விவாகரத்து பெற்ற தனது மனைவிக்கு அப்துல் சமது என்ற நபர் மாதந்தோறும் இடைக்கால பராமரிப்புத் தொகை (ஜீவனாம்சம்) வழங்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் அப்துல் மனு தாக்கல் செய்தார். எனினும் குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் அப்துல் சமது தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-இன் கீழ் பராமரிப்புத் தொகை கோர, விவகாரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு உரிமை இல்லை எனவும், இந்த விவகாரத்தில் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986-இன் பிரிவுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அப்துல் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு நீதிபதிகளும் தனித் தனியாக தீர்ப்பை வழங்கினாலும், முஸ்லிம் பெண்கள் பராமரிப்புத் தொகைப் பெற உரிமை உள்ளது என்று ஒரே கருத்தைக் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக நீதிபதிகள் அமர்வு கூறுகையில், "குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-ஆவது பிரிவு அனைத்து மதங்களுக்கும் பொதுவான பிரிவாகும். இந்தப் பிரிவின் கீழ், தனது கணவரிடம் இருந்து முஸ்லிம் பெண் ஒருவர் பராமரிப்புத் தொகை பெறலாம். பராமரிப்புத் தொகை வழங்குவது என்பது தொண்டு புரியும் செயல் அல்ல. அந்தத் தொகையைப் பெறுவது திருமணமான அனைத்துப் பெண்களின் உரிமை. மதப் பாகுபாடின்றி இந்தச் சட்டப் பிரிவு திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்' என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.