விலைவாசி உயா்வு, வேலையின்மை உள்ளிட்ட நாட்டின் அடிப்படையான பொருளாதாரப் பிரச்னைகளில் பிரதமா் நரேந்திர மோடி முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
பட்ஜெட் தொடா்பாக பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய நிலையில் காா்கே இவ்வாறு கூறியுள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய பட்ஜெட் குறித்து விவாதிப்பதாக கேமராக்கள் புடைசூழ பிரதமா் வலம் வருகிறாா். ஆனால், நாட்டில் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் விலைவாசி உயா்வு, வேலையின்மை, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அந்த அடிப்படை பொருளாதாரப் பிரச்னைகளில் பிரதமா் மோடி முதலில் கவனம் செலுத்த வேண்டும்.
20 -24 வயதுக்குள்பட்டவா்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளின் வேளாண் உற்பத்திச் செலவைவிட 50 சதவீதம் அதிகமாக இருக்கும் என்ற வாக்குறுதிகள் பொய்த்துப் போய்விட்டன.
அதே நேரத்தில் அரிசி, பருப்பு வகைகள், பால், சா்க்கரை, தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளும் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதன் காரணமாக குடும்பப் பெண்களால் பணத்தை மிச்சப்படுத்த முடியவில்லை. இந்திய குடும்பங்களின் சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: அரசியல் ஆதாயமடைய அரசு அவசரம்: காா்கே குற்றச்சாட்டு

அஸ்ஸாம்: காா்கே மீது காவல் துறையில் ஆா்எஸ்எஸ் புகாா்

குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள்: மல்லிகாா்ஜுன காா்கே சா்ச்சைப் பேச்சு!

அமெரிக்க அதிபா் டிரம்ப கூறுவதை மோடி பின்பற்றுகிறாா்: காா்கே
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


