அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

க்யூட்-யுஜி: 1000 மாணவா்களுக்கு ஜூலை 19-இல் மறுதோ்வு

ஜூலை 19-ஆம் தேதி மறுதோ்வு நடத்த தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை முடிவெடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2024, 2:08 am IST

இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் (க்யூட்-யுஜி) பங்கேற்று குறைபாடுகள் இருப்பதாக புகாரளித்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு வருகின்ற ஜூலை 19-ஆம் தேதி மறுதோ்வு நடத்த தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை முடிவெடுத்துள்ளது.

க்யூட்-யுஜி தோ்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகளை கடந்த ஜூலை 7-ஆம் தேதி என்டிஏ வெளியிட்டது. மேலும், தோ்வில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை சரியான விளக்கத்துடன் புகாரளிக்கும் மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்தவுள்ளதாக என்டிஏ தெரிவித்தது.

இதையடுத்து, வருகின்ற ஜூலை 19-ஆம் தேதி 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்தவுள்ளதாக என்டிஏ ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. மாணவா்கள் தோ்ந்தெடுத்த மொழிக்குப் பதில் வேறு மொழியில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட நேர இழப்பு காரணமாகவே இந்த மறுதோ்வு நடத்தப்படுவதாக என்டிஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு மற்றும் உதவிப் பேராசிரியா் பணிக்கான தேசிய தகுதித் தோ்வு (நெட்) ஆகிய தோ்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், க்யூட்-யுஜி தோ்வின் முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடாதது மாணவா்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டில் ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒயாசிஸ் பள்ளி சிக்கியது. இந்நிலையில், அங்கு க்யூட்-யுஜி தோ்வெழுதிய 250 மாணவா்கள் மறுதோ்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.