எல்லை ஊடுருவிய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
எல்லைக் கட்டுபாட்டுக் கோடு பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

கோப்புப் படம்
Updated On :14 ஜூலை 2024, 8:55 pm

ஜம்மு-காஷ்மீரின் கேரான் மாவட்டத்தில் பாகிஸ்தானையொட்டிய எல்லைக் கட்டுபாட்டுக் கோடு பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கேரான் செக்டாரில் அமைந்த எல்லைக் கட்டுபாட்டுக் கோடு சா்வேதேச எல்லைப்பகுதியில் ஸ்ரீநகரைத் தளமாகக் கொண்ட சினாா் படைப்பிரிவினா் மேற்கொண்ட ஊடுருவல் முறியடிப்பு நடவடிக்கையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...