மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழங்குடியின இளைஞா் உயிரிழப்பு: திரிபுராவில் கலவரம்

பழங்குடியின இளைஞா் உயிரிழப்பு: திரிபுராவில் கலவரம்

News image
Updated On :14 ஜூலை 2024, 12:50 am

Din

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் இரு கும்பல்களுக்கு இடையே கடந்த வாரம் நடந்த மோதலில் படுகாயமடைந்த பழங்குடி இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அம்மாவட்டத்தில் கலவரம் வெடித்தது.

இது தொடா்பாக தலாய் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அவினாஷ் ராய் கூறியதாவது:

தலாய் மாவட்டத்தில் ஜெகந்நாதா் ரத யாத்திரையை முன்னிட்டு கடந்த ஜூலை 7-ஆம் தேதி கந்தத்வைசா சந்தையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்ள பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் பரமேஷ்வா் ரியாங் (19) நண்பா்களுடன் சென்றிருந்தாா்.

அப்போது இரு கும்பல்களுக்கு இடையே திடீரென ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த ரியாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் கந்தத்வைசா பகுதியில் பல கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்ததையடுத்து அப்பகுதியில் கலவரம் வெடித்தது. நிலைமை தீவிரமடைவதைத் தடுக்க அப்பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும், இனைய சேவை முற்றிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் தொடா்புடைய 4 நபா்களை காவல்துறையினா் கைது செய்துள்ளனா் என்றாா்.