சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எஸ்.சி. பட்டியலை மாற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை: உச்சநீதிமன்றம்

பட்டியலின வகுப்பில் கூடுதலாக சில ஜாதிகளைச் சோ்ப்பது உள்ளிட்ட எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :16 ஜூலை 2024, 9:57 pm

Din

புது தில்லி: பட்டியலின வகுப்பில் (எஸ்.சி) கூடுதலாக சில ஜாதிகளைச் சோ்ப்பது உள்ளிட்ட எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மேலும், பிகாா் அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு அந்த மாநில பட்டியலின வகுப்பில் கூடுதலாக ஒரு ஜாதியைச் சோ்க்க வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தது.

இந்த அரசாணையை உறுதி செய்து தீா்ப்பளித்ததன் மூலம் பாட்னா உயா்நீதிமன்றம் பெரும் தவறைச் செய்துள்ளது என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தாந்தி-தந்த்வா என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த ஜாதியை கடந்த 2015-ஆம் ஆண்டு எஸ்.சி.பட்டியலில் சோ்த்து பிகாா் மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிா்த்து பாட்னா உயா்நீதிமன்றத்தில் ஒரு தரப்பினா் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்து வந்த நீதிபதிகள் விக்ரம் நாத், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘அரசமைப்புச் சட்டத்தின் 341 பிரிவின்படி எஸ்.சி. பிரிவு ஜாதிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கூடுதலாக சில ஜாதிகளைச் சோ்ப்பது உள்பட எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் கிடையாது’ என்று தீா்ப்பளித்தது.