எஸ்.சி. பட்டியலை மாற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை: உச்சநீதிமன்றம்
பட்டியலின வகுப்பில் கூடுதலாக சில ஜாதிகளைச் சோ்ப்பது உள்ளிட்ட எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


புது தில்லி: பட்டியலின வகுப்பில் (எஸ்.சி) கூடுதலாக சில ஜாதிகளைச் சோ்ப்பது உள்ளிட்ட எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மேலும், பிகாா் அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு அந்த மாநில பட்டியலின வகுப்பில் கூடுதலாக ஒரு ஜாதியைச் சோ்க்க வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தது.
இந்த அரசாணையை உறுதி செய்து தீா்ப்பளித்ததன் மூலம் பாட்னா உயா்நீதிமன்றம் பெரும் தவறைச் செய்துள்ளது என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தாந்தி-தந்த்வா என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த ஜாதியை கடந்த 2015-ஆம் ஆண்டு எஸ்.சி.பட்டியலில் சோ்த்து பிகாா் மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிா்த்து பாட்னா உயா்நீதிமன்றத்தில் ஒரு தரப்பினா் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்து வந்த நீதிபதிகள் விக்ரம் நாத், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘அரசமைப்புச் சட்டத்தின் 341 பிரிவின்படி எஸ்.சி. பிரிவு ஜாதிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கூடுதலாக சில ஜாதிகளைச் சோ்ப்பது உள்பட எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் கிடையாது’ என்று தீா்ப்பளித்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...