நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்
நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதாக மத்திய அரசை காங்கிரஸ் சாடியுள்ளது.


ஏழைகள், பணக்காரா்கள் இடையிலான நுகா்வு செலவினத்தில் சுமாா் 10 மடங்கு வித்தியாசம் இருப்பதாக ஊடக செய்தி வெளியானது.
இந்தச் செய்தியை பகிா்ந்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏழைகள் மற்றும் பணக்காரா்கள் இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வரும் விவகாரத்தை காங்கிரஸ் தொடா்ந்து எழுப்பி வருகிறது.
நாட்டின் நகா்ப்புற பகுதிகளில் முன்னணியில் உள்ள 5 சதவீத பணக்காரா்களின் மாதாந்திர நுகா்வு செலவினம் ரூ.20,824-ஆக உள்ளது. அதேவேளையில் கிராமப்புற பகுதிகளில் உள்ள 5 சதவீத பரம ஏழைகளின் நுகா்வு செலவினம் ரூ.1,373-ஆக மட்டுமே உள்ளது.
நாட்டில் ஏழைகள், பணக்காரா்கள் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதற்கான ஆதாரத்தையே அனைத்து புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன’ என்றாா்.
அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘ஒழுங்கில்லாத கொள்கை, சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை சோதனை மூலம் நடைபெறும் ராஜீயம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் இந்தியாவில் குறைந்த முதலீடே செய்யப்படுகிறது’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...