பெங்களூருவில் வேட்டி அணிந்து வந்த விவசாயியை ஷாப்பிங் மாலுக்குள் அனுமதிக்க மறுத்ததால் தற்காலிகமாக மூடப்பட்ட ஜி.டி. வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தெற்கு பெங்களூரு மாகடி சாலையில் உள்ள ஜிடி வேர்ல்ட் மால், வேட்டி உடுத்திய விவசாயிக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்பட்ட நிலையில், புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே தெற்கு மண்டலப் பிரிவு, 1.78 கோடி ரூபாய் வரி நிலுவையில் இருந்ததால், மாலுக்கு சீல் வைத்தது.
புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே தெற்கு மண்டல ஆணையர் வினோத் பிரியா, 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரியை மால் செலுத்தவில்லை.
இதனால் வணிக வளாகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையை செலுத்த வணிகவளாக அதிகாரிகளுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், வரி கட்டாததால் மாலுக்கு சீல் வைக்க புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இச்சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில் ஜிடி வணிக வளாகம் 1 கோடியே 78 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்திருந்ததாகக்கூறி பெங்களூரு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை மத்தியம்: பயனின்றிக் கிடக்கும் புதிய வணிக வளாகம்!

மூடப்பட்ட தலைவா்களின் சிலைகள் திறப்பு

ஒசூரில் ரூ. 19.5 கோடியில் வணிக வளாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்!

கோவையில் ஜி.டி.நாயுடு சிலை திறப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


