உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் இருந்து தில்லிக்கு சனிக்கிழமை சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் அம்ரோஹா அருகே திடீரென தடம்புரண்டது.
இந்த விபத்தில் ரயிலின் 7 பெட்டிகள் கவிழ்ந்தன. இருப்பினும், இந்த சம்பவத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விரைந்தனர். இந்த சம்பவத்தால் தில்லி-லக்னௌ ரயில் பாதை பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகா் - திப்ரூகா் (அஸ்ஸாம்) விரைவு ரயில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்தன. இந்த விபத்தில் நான்கு பயணிகள் பலியாகினர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது

விரைவில் நவீன ரயில் பெட்டிகளுடன் இயங்க உள்ள ஏலகிரி விரைவு ரயில்!

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை

பஞ்சாப் சரக்கு ரயில் வழித் தடங்களில் ‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு: ரயில்வே அமைச்சகம்
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு



