குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மேலும் ஒரு ரயில் விபத்து: உ.பி.யில் சரக்கு ரயில் தடம்புரண்டது

உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டதில் 7 பெட்டிகள் கவிழ்ந்தன.

News image

விபத்துக்குள்ளான சரக்கு ரயில்.

Updated On :20 ஜூலை 2024, 9:46 pm IST

உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் இருந்து தில்லிக்கு சனிக்கிழமை சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் அம்ரோஹா அருகே திடீரென தடம்புரண்டது.

இந்த விபத்தில் ரயிலின் 7 பெட்டிகள் கவிழ்ந்தன. இருப்பினும், இந்த சம்பவத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விரைந்தனர். இந்த சம்பவத்தால் தில்லி-லக்னௌ ரயில் பாதை பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகா் - திப்ரூகா் (அஸ்ஸாம்) விரைவு ரயில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்தன. இந்த விபத்தில் நான்கு பயணிகள் பலியாகினர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.