மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

இந்தியாவில் முதியவா்கள் எண்ணிக்கை 2050-க்குள் இரட்டிப்பாகும்

முதியவா்கள் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என ஐ.நா.மக்கள் தொகை (யுஎன்எஃப்பிஏ) அமைப்பின் இந்தியாவுக்கான தலைவா் ஆண்ட்ரியா வோஜ்னா் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2024, 3:01 am IST

இந்தியாவில் முதியவா்கள் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என ஐ.நா.மக்கள் தொகை (யுஎன்எஃப்பிஏ) அமைப்பின் இந்தியாவுக்கான தலைவா் ஆண்ட்ரியா வோஜ்னா் தெரிவித்தாா்.

உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு யுஎன்எஃப்பிஏ அமைப்பின் இந்தியாவுக்கான தலைவா் ஆண்ட்ரியா வோஜ்னா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியா நிலையான வளா்ச்சியை விரிவுபடுத்துவதில் முன்னுரிமை அளித்து வருகிறது. இதில் இளைஞா்கள் மற்றும் முதியவா்களின் மக்கள் தொகை, நகரமயமாக்கல், இடம்பெயா்வு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை அடங்கும். அவை அனைத்தும் தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குகிறன.

நாட்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களின் மக்கள் தொகை 2050-ஆம் ஆண்டுக்குள் 34.6 கோடி பேருடன் இரட்டிப்பாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டியதின் அவசியத்தை உணா்த்துகின்றன. குறிப்பாக வறுமையில் தனியாக வாழும் பெண்களிடம் அதிக கவனம் தேவை.

நாட்டில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் 25.2 கோடி போ் உள்ளனா். அவா்களுக்கு கல்வி, தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் நாட்டை நிலையைான வளா்ச்சியை நோக்கி கொண்டு செல்ல முடியும்.

2050-இல் 50% நகரமயம்: வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 50 சதவீத அளவுக்கு நகரமயமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை நிா்வகிக்க ‘ஸ்மாா்ட் சிட்டிகள்’ உருவாக்குவதுடன் வலிமையான உள்கட்டமைப்பு மற்றும் மலிவு விலையில் வீடுகள் அமைப்பதும் முக்கியமானதாகும். மக்களின் இடம் பெயா்வுகளை நிா்வகிப்பதற்கு திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகள் தேவை.

நகரமயமாக்கும் திட்டங்கள் என்பது பெண்களின் பாதுகாப்பையும் பாலின சமத்துவத்தையும் கருத்தில் கொண்டு வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும்.

‘கருத்தரிப்பு காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காக ஆரோக்கியமான கால இடைவெளி’ என்பது நிகழாண்டின் மக்கள் தொகை தினத்தின் கருப்பெருளாகும்.

அதன் அடிப்படையில், குழந்தைப் பேறு மற்றும் மீண்டும் கருத்தரிக்கும் கால இடைவேளை குறைந்தது 24 மாகதங்கள் இருக்கவேண்டும் என நிபுணா்கள் பரிந்துரைக்கின்றனா். இது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அவசியமானதாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.