நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

உ.பி. மேலவை எதிர்க்கட்சித் தலைவராக சமாஜவாதி லால் பிஹாரி யாதவ் தேர்வு!

உத்தரப் பிரதேச மாநில மேலவை எதிர்க்கட்சித் தலைவராக சமாஜவாதி கட்சியின் லால் பிஹாரி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image

லால் பிஹாரி யாதவ் - கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2024, 8:33 pm IST

உத்தரப் பிரதேச மாநில மேலவை எதிர்க்கட்சித் தலைவராக சமாஜவாதி கட்சியின் லால் பிஹாரி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்ட மேலவைத் தலைவர் குன்வார் மன்வேந்திர சிங், லால் பிஹாரி யாதவுக்கு மேலவை எதிர்க்கட்சித் தலைவராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இது குறித்து மேலவை செயலாளர் ராஜேஷ் சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமாஜவாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி தெரிவித்துள்ளதாவது, ''சட்ட மேலவையின் தலைமை கொறடாவாக கிரண்பால் காஷ்யப் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று அஷுதோஷ் சின்ஹா கொறடாவாகவும், ஜாஸ்மீர் அன்சாரி மேலவையின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.

100 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் எதிர்க்கட்சித் தலைவராக குறைந்தபட்சம் 10 உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் மேலவைக்கு நடைபெற்ற தேர்தலில் சமாஜவாதி கட்சி கூடுதலாக 3 உறுப்பினர்களைப் பெற்றதால், அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஆளும் பாஜகவுக்கு மேலவையில் 79 உறுப்பினர்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.