தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

பட்டியலிட்ட நாளில் பிஹாரி லால் பங்குகள் 63% உயர்வு! சந்தையில் அமோக வரவேற்பு!!

பிஹாரி லால் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ. 285 ஐ விட 63 சதவீதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டது.

News image

பிஹாரி லால் இன்ஜினியரிங் லிமிடெட்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 9:55 pm IST

புதுதில்லி: இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி நிறுவனமான பிஹாரி லால் இன்ஜினியரிங் லிமிடெட்டின் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ. 285 ஐ விட 63 சதவீதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில், வெளியீட்டு விலையிலிருந்து 60.70 சதவீதம் உயர்ந்து, ரூ. 458 க்கு சந்தையில் அறிமுகமானது. அதே வேளையில், நிஃப்டி-யில் 63.15% பிரீமியத்துடன் ரூ. 465-க்கு பட்டியலிடப்பட்டது.

இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,135.22 கோடியாக இருந்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, பிஹாரி லால் இன்ஜினியரிங் லிமிடெட்டின் ஐபிஓ-விற்கான கடைசி நாளில், அதன் ஐபிஓ சுமார் 108.44 மடங்கு அதிக சந்தா பெறப்பட்டதாக தெரிவித்தது.

ரூ. 302 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ, பங்கு ஒன்றுக்கு ரூ. 271 முதல் ரூ. 285 வரை நிர்ணயிக்கப்பட்டது.

Summary

Behari Lal Engineering Ltd listed with a massive premium of over 63 per cent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.