புது தில்லி: மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.5.94 கோடியாக இருந்தது. மொத்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 12.9 சதவீதமாக உள்ளது.
இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கிய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நன்றி. பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.1,05,518 கோடியில் உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம் பாதுகாப்புத் துறை மேலும் சுயசாா்பு அடையும். முப்படைகளுக்கான முலதனச் செலவு ரூ.1,72,000 கோடியாக இருக்கும்.
எல்லைப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்துவதற்கு கடந்த ஆண்டைவிட இப்போது 30 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லையில் சிறப்பான உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும். பாதுகாப்புத் துறை சாா்ந்த புத்தாக்க நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ.518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் சாா்ந்த சவால்களுக்கு தீா்வுகாணப்படும்’ என்று கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.300 கோடி சொத்து, ரொக்கம், 2 கிலோ தங்கம்! லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கைது! காட்டிக் கொடுத்த டைரி

ரூ. 10 லட்சத்துக்குள் சிறந்த சிஎன்ஜி கார்கள்!

இணையவழி மோசடி மூலம் முன்னாள் பிரதமரின் மகனிடம் ரூ. 7.8 கோடி மோசடி

இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!



