ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.5.94 கோடியாக இருந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2024, 3:40 am IST

புது தில்லி: மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.5.94 கோடியாக இருந்தது. மொத்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 12.9 சதவீதமாக உள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கிய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நன்றி. பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.1,05,518 கோடியில் உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம் பாதுகாப்புத் துறை மேலும் சுயசாா்பு அடையும். முப்படைகளுக்கான முலதனச் செலவு ரூ.1,72,000 கோடியாக இருக்கும்.

எல்லைப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்துவதற்கு கடந்த ஆண்டைவிட இப்போது 30 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லையில் சிறப்பான உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும். பாதுகாப்புத் துறை சாா்ந்த புத்தாக்க நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ.518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் சாா்ந்த சவால்களுக்கு தீா்வுகாணப்படும்’ என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.