3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனைநீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.5.94 கோடியாக இருந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2024, 3:40 am IST

புது தில்லி: மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.5.94 கோடியாக இருந்தது. மொத்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 12.9 சதவீதமாக உள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கிய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நன்றி. பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.1,05,518 கோடியில் உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம் பாதுகாப்புத் துறை மேலும் சுயசாா்பு அடையும். முப்படைகளுக்கான முலதனச் செலவு ரூ.1,72,000 கோடியாக இருக்கும்.

எல்லைப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்துவதற்கு கடந்த ஆண்டைவிட இப்போது 30 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லையில் சிறப்பான உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும். பாதுகாப்புத் துறை சாா்ந்த புத்தாக்க நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ.518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் சாா்ந்த சவால்களுக்கு தீா்வுகாணப்படும்’ என்று கூறியுள்ளாா்.