ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ராஜஸ்தான்: கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

அஜ்மீர் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது நான்கு மாதக் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :23 ஜூலை 2024, 12:29 pm

DIN

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது நான்கு மாதக் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் மதார் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் பிரியங்கா சௌராசியா (24), அவரது மகன் ஹரியான்ஷ் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஷியாம் சிங் கூறுகையில், “அவர்களது உடலைக் கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரியங்காவை ஸ்கூட்டர் ஓட்டவிடாமல் அவரது கணவர், தாயார் தடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த, அவர் தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.