
நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நிர்மலா சீதாராமன் தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள்,
மூல ஆதாயங்களுக்காக வரி விதிப்பு அணுகுமுறையை எளிமைப்படுத்த விரும்பினோம். மக்களுக்கான வரி நடைமுறைகள் பட்ஜெட்டில் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உண்மையான சராசரி வரிவிதிப்பு குறைந்துள்ளது.
நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது. வரி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகுப்பு சொத்து மதிப்புகளைக் கொண்டவர்களுக்கான அம்சங்களைக் கொண்டுள்ளது. அதனால் சராசரிக்கும் கீழாக 12.5 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிகவும் குறைவாகும்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், பங்குச்சந்தை முதலீடுகளை ஊக்குவிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.