ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

பட்ஜெட்டில் புதிய வாய்ப்புகள்; வரி நடைமுறைகள் எளிமை - நிர்மலா சீதாராமன் பேட்டி

பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு விவரம்...

News image

செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் - பிடிஐ

Updated On :23 ஜூலை 2024, 3:48 pm IST

நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நிர்மலா சீதாராமன் தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள்,

மூல ஆதாயங்களுக்காக வரி விதிப்பு அணுகுமுறையை எளிமைப்படுத்த விரும்பினோம். மக்களுக்கான வரி நடைமுறைகள் பட்ஜெட்டில் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உண்மையான சராசரி வரிவிதிப்பு குறைந்துள்ளது.

நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது. வரி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகுப்பு சொத்து மதிப்புகளைக் கொண்டவர்களுக்கான அம்சங்களைக் கொண்டுள்ளது. அதனால் சராசரிக்கும் கீழாக 12.5 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிகவும் குறைவாகும்.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், பங்குச்சந்தை முதலீடுகளை ஊக்குவிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.