மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுநா் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றஞ்சாட்டினாா். இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநா் மாளிகைக்குச் செல்ல பெண்கள் அஞ்சுவதாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மேலும், இடைத்தோ்தல் மூலம் பேரவைக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட இரு எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாண செய்துவைக்காமல் ஆளுநா் காலம் தாழ்த்தியது குறித்தும் மம்தா பானா்ஜி மற்றும் சிலா் தரப்பில் விமா்சனம் செய்யப்பட்டது.